News April 25, 2024
திருப்பூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

வெள்ளகோவில் முத்தூர் ரோடு அறிவொளி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ராஜேஷ்குமார் (34). இவருக்கு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி தர்ஷினி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.இந்நிலையில் வெள்ளகோவில் கோவை ரெகுலர் சர்வீஸ் வேன் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று நடந்து சென்ற போது பஸ் மோதி இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News November 4, 2025
திருப்பூரில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தாராபுரம் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஆரோக்கியதாஸ் என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு 10 வயது சிறுவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போக்சோ பிரிவின் கீழ் ஆரோக்கியதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்து 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
News November 3, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 03.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுரம், காங்கேயம், அவிநாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 3, 2025
திருப்பூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்அப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE IT!


