News April 25, 2024
புதுக்கோட்டை அருகே விவசாயிகளுக்கு பயிற்சி

பனையப்பட்டி கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து செயல் விளக்க பயிற்சி நேற்று நடத்தினர். இந்த செயல் விளக்கத்தில் பனையப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பழனியப்பன் தங்களின் அனுபவத்தை மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த கல்லூரி மாணவிகள் வேளாண் திட்டங்கள் பற்றி கூறினர்.
Similar News
News January 3, 2026
புதுக்கோட்டை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

புதுக்கோட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 3, 2026
புதுகை: BE படித்தோருக்கு ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் & நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது
1. வகை: பொதுத்துறை அரசு வேலை
2. பணியிடங்கள்: 93
3. வயது: 21-41
4. சம்பளம்: ஆண்டுக்கு ரூ.3.10 லட்சம் முதல் ரூ. 4.80 லட்சம் வரை
5. கல்வித் தகுதி: BE / B.Tech / M.Tech
6. கடைசி தேதி: 06.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 3, 2026
புதுகை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

நாளை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதுகை திருக்கோகர்ணம் அருகிலுள்ள பள்ளத்திவயல் பகுதியில் பாஜக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாளை (ஜன.4) மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருப்பதையொட்டி நாளை ஒருநாள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார்.


