News April 25, 2024
கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்ட மக்கள் வானொலி, தொலைபேசி, செய்தித்தாள் மூலமாக உள்ளூர் வானிலையை தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மோர், லஸ்ஸி, பழைய சோற்று நீர், எலுமிச்சைச் சாறு போன்ற பானங்களையும் பருக வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று மாலை தெரிவித்தார்.
Similar News
News January 18, 2026
கடலூர்: நடமாடும் உணவகம் அமைக்க மானியம்

தமிழக அரசின் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவுகளை சேர்ந்த தொழில் முனைவோருக்கு நடமாடும் உணவக (Food Truck) தொழில் அமைக்க அரசு சார்பில் ரூ.1,24,250 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட தாட்கோ மேலாளர் அல்லது www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகவும். இதை ஷேர் செய்யவும்!
News January 18, 2026
கடலூர்: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
News January 18, 2026
கடலூர்: இன்று தை அமாவாசை – இதை மறக்காதிங்க

தை அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு உங்களால் இயன்றதை கொண்டு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது பசி தாகம் தீர்ந்து வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். இதனை செய்தால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கி, சுப காரியத்தின் தடைகள் விலகி, சொத்துகள் சுகம் கிடைக்கும், நோய் நோடிகள் அடையும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இன்று மாலை, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க.!


