News April 24, 2024
உறக்கம் வரவில்லையா… இதோ சில டிப்ஸ்

உறங்க செல்வதற்கு முன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இது உங்களை நிதானமாக்கி மன அமைதியைத் தரும். கால்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் அவற்றைத் தளர்த்தி நேராக வைத்துப் படுக்கலாம். இதற்குப் பிறகு உறங்க முயற்சி செய்யலாம். படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போனை தள்ளி வையுங்கள். நிறைவான தூக்கத்திற்கு அறையைக் காற்றோட்டமாகவும், இருட்டாகவும் வைத்திருக்க வேண்டும்.
Similar News
News January 13, 2026
ராகு காலம் தெரியும்.. இஷ்டி காலம் தெரியுமா?

அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதி பகுதி & அதனைத் தொடர்ந்து வரும் பிரதமை திதியின் ஆரம்பப் பகுதிகள் இணைந்ததே இஷ்டி காலம். ‘இஷ்டி’ என்பதற்கு யாகம், பூஜை அல்லது அர்ப்பணம் என பொருள். இக்காலத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு செய்தால், இஷ்ட தெய்வத்தின் அருளும், வரங்களும் கிடைக்குமாம். வீட்டு பூஜைகள், ஹோமம், யாகம், தானம், தர்மம், குல தெய்வ வழிபாடு, உலக நன்மைக்கான பிரார்த்தனை செய்வது மிகவும் உகந்ததாம்.
News January 13, 2026
ராகு காலம் தெரியும்.. இஷ்டி காலம் தெரியுமா?

அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதி பகுதி & அதனைத் தொடர்ந்து வரும் பிரதமை திதியின் ஆரம்பப் பகுதிகள் இணைந்ததே இஷ்டி காலம். ‘இஷ்டி’ என்பதற்கு யாகம், பூஜை அல்லது அர்ப்பணம் என பொருள். இக்காலத்தில் இஷ்ட தெய்வ வழிபாடு செய்தால், இஷ்ட தெய்வத்தின் அருளும், வரங்களும் கிடைக்குமாம். வீட்டு பூஜைகள், ஹோமம், யாகம், தானம், தர்மம், குல தெய்வ வழிபாடு, உலக நன்மைக்கான பிரார்த்தனை செய்வது மிகவும் உகந்ததாம்.
News January 13, 2026
BREAKING: அதிகாலையில் தமிழக மீனவர்கள் அதிரடி கைது

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் அதிகாலையில் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு கடல் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 2 படகுகள், வலைகள், மீன்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 4-ம் தேதி மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் கைது படலம் தொடர்வதாக தமிழ்நாடு மீனவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


