News April 24, 2024
ஏப்ரல் 25 முதல் தண்ணீர்ப் பந்தல் அமைக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்து மக்களைக் காக்க ஏப்ரல் 25 முதல், தமிழகத்தில் தண்ணீர்ப் பந்தல்களை உருவாக்கி மக்களுக்கு இலவசமாகத் தண்ணீர் வழங்க அறிவுறுத்தினார்.
Similar News
News January 15, 2026
விரைவில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் FTA ஒப்பந்தம்

வரும் ஜன.27-ல் இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தாகிறது. மிகப்பெரிய FTA ஒப்பந்தமாக கருதப்படும் இது, உலகின் 25% மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, தோல் பொருள்களுக்கான வரி குறைய வாய்ப்புள்ளது. இதில் விவசாயப் பொருள்கள் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News January 15, 2026
போர் முழக்கத்தை உணர்த்தும் பீட்சா?

US-ன் பென்டகன் மாளிகையை சுற்றி பீட்சா விற்பனை அதிகரித்திருப்பது, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், US ராணுவ நடவடிக்கையில் ஈடுபடும்போது பென்டகனில் பணியாற்றுவோர் அதிகளவு பீட்சா ஆர்டர் செய்வார்களாம். இதன் அடிப்படையில், நாளை தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது உண்மையில்லை என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News January 15, 2026
520 பெண்களுடன் கணவர்.. மனைவியின் விநோத செயல்!

ஜப்பான் பெண்ணுக்கு, அரிய வகை நோயுடன் மகன் பிறக்க, கணவன் துணையுடன் அதை வெல்ல நினைக்கிறார். அப்போது தான், கணவர் 520 பெண்களுடன் முறை தவறி பழகி வருவது தெரியவருகிறது. முதலில் பழிவாங்க எண்ணினாலும், மகனின் நிலை கண்டு நூதன முடிவை எடுத்தார். கணவனை பிரிந்து, அவரின் முறையற்ற உறவுகளை Comics புக்காக வெளியிட்டுள்ளார். இதன்மூலம் கோபத்தை தணித்து கொண்டது மட்டுமின்றி, மகன் சிகிச்சைக்கும் பணம் சேர்த்துள்ளார்.


