News April 24, 2024

குண்டர் சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும்

image

சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி சர்மிளா தற்கொலை செய்துகொண்டது வேதனையளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பெற்றோர்களே அனைத்துக்கும் காரணம் என சர்மிளா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதால், அவர்களை உடனே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், ஆணவக்கொலைத் தடுப்புச் சட்டத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News January 11, 2026

40 வயசிலும் பெண்கள் ஹெல்தியாக இருக்க 5 டிப்ஸ்.!

image

◆எடை குறைக்க வேண்டும் என்பதற்காக காலையில் டிபனை தவிர்க்க வேண்டாம். அது எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும் ◆High BP, இதயம் சார்ந்த பிரச்னைகளை தவிர்க்க, உணவில் உப்பை குறையுங்கள் ◆உடலுக்கு உழைப்பு கொடுங்கள். நீண்ட கால ஆரோக்கியத்திற்கு, தினசரி 30 நிமிடமாவது உடற்பயிற்சிகள் பண்ணுங்க ◆தினசரி 8 மணி நேரம் தூக்கத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த பதிவை அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

கனமழை.. பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?

image

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், க.குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 11, 2026

₹15,000 ஓய்வூதியம் தரவேண்டும்: ஜி.கே.வாசன்

image

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். அவர்களுக்கு ஓய்வூதியமாக ₹2,000 வழங்குவது போதுமானது அல்ல என்றும், அவர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ₹15,000 அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!