News April 24, 2024

இங்கிலாந்து செல்ல முயன்ற 5 பேர் பலி

image

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். அவர்களைத் தடுக்க இங்கிலாந்து அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், பிரான்சில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட அகதிகள் ஒரு படகில் ஆங்கிலக் கால்வாய் வழியாக இங்கிலாந்து செல்ல முயன்றனர். அப்போது மணல் திட்டில் படகு மோதியதில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Similar News

News November 13, 2025

7 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 18-ம் தேதி வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

News November 13, 2025

குளிர்காலத்தில் உணவை சூடுபடுத்துகிறீர்களா?

image

சுடச்சுட உணவை சாப்பிட வேண்டும் என சிலர், குளிர்காலத்தில் மீண்டும் மீண்டும் உணவை சுட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால், இது உடல் ஆரோக்யத்தை பாதிக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அடிக்கடி சுட வைப்பதால் உணவில் பாக்டீரியா, பூஞ்சைகள் வளரும் வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் செரிமான பிரச்னைகள், வாந்தி, கல்லீரல் பாதிப்பு, சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாவதாக கூறுகின்றனர்.

News November 13, 2025

International Roundup: பாலியல் குற்றவாளியுடன் டிரம்ப்

image

*ஈராக் தேர்தலில் தற்போதைய PM முகமது ஷியா அல்- சூடானி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு. *ரஷ்யாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க இன்னும் அதிக அழுத்தம் தர ஜி7 நாடுகள் முடிவு. *பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் டிரம்ப் இருந்த ஆவணங்களை ஜனநாயக கட்சி வெளியிட்டது. *குவாண்டம் கம்ப்யூட்டருக்கான சோதனை சிப்பை (LOON) கண்டுபிடித்துள்ளதாக IBM அறிவிப்பு. *சூடான் உள்நாட்டு போரை நிறுத்த ஐநா அழைப்பு.

error: Content is protected !!