News April 24, 2024

தைவானில் 24 மணி நேரத்தில் 247 முறை நிலநடுக்கம்

image

தைவான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து 247 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதில் 6.3 ரிக்டர் அளவிலும் ஒருமுறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 20 நாள்களில் 1,095 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதில் 12 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 3இல் ஏற்பட்ட நிலநடுக்கமே, கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது.

Similar News

News January 3, 2026

தவெக பொங்கல் பரிசில் குக்கர்

image

தவெக சார்பில் குக்கர், கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த், 500 பெண்களுக்கு இத்தொகுப்பை வழங்கியுள்ளார். முன்னதாக, கரூர் மக்களுக்கு தீபாவளி பரிசாக செந்தில்பாலாஜி சில்வர் அண்டா கொடுத்திருந்தார். இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் குக்கரை தவெக இணைத்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

News January 3, 2026

FLASH: அரசு ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்!

image

<<18749969>>TAPS பென்ஷன்<<>> திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அத்துடன் ஜாக்டோ-ஜியோ அமைப்பு வரும் 6-ம் தேதி முதல் நடத்த இருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும், தங்களது இதர கோரிக்கைகளையும் CM நிறைவேற்றுவார் என நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர்கள், CM ஸ்டாலினுக்கு இனிப்பு ஊட்டி இந்த அறிவிப்பை கொண்டாடுகின்றனர்.

News January 3, 2026

KKR அணியில் இருந்து வங்கதேச வீரரை நீக்க BCCI ஆணை

image

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு KKR அணிக்கு அறிவுறுத்தி உள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்டதை அடுத்து, IPL ஏலத்தில் முஸ்தபிசுரை ₹9.20 கோடிக்கு வாங்கியதற்காக அந்த அணியின் உரிமையாளரும், <<18746993>>நடிகருமான ஷாருக் கானுக்கு<<>> நாடு முழுவதும் பாஜக, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பிசிசிஐ இன்று உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!