News November 19, 2025
இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 14, 2026
காங்., தேமுதிகவுக்கு மட்டும் அதிக தொகுதிகளா? CPM

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் பஞ்சாயத்து வெடித்துள்ளது. காங்கிரஸுக்கும், தேமுதிகவுக்கும் கூடுதல் தொகுதிகளை கொடுக்கும் திமுக, எங்களுக்கு தொகுதிகளை குறைப்பதில் எந்த நியாயமும் இல்லை என <<19377648>>CPM <<>>மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மதவாத சக்திகளை விரட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தங்கள் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளும் முக்கியம் எனக் கூறி திமுகவுக்கு அவர் செக் வைத்துள்ளார்.
News March 14, 2026
அதிமுக- தவெக கூட்டணியா? அதிகாரப்பூர்வ விளக்கம்

விஜய்க்கு DCM பதவி, 50+ தொகுதிகள் என்ற அடிப்படையில், அதிமுக கூட்டணியில் <<19375620>>தவெக <<>>இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மக்கள் பிரச்னைகளிலிருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பவே, தவெகவை தொடர்புப்படுத்தி இதுபோன்ற தகவல் வெளியாவதாக CTR கூறியுள்ளார். கட்சி நிகழ்ச்சிகள் உள்பட தலைமை சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே தவெகவினர் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
News March 14, 2026
BIG FLASH: ஜப்பான் – வடகொரியா இடையே பதற்றம்

ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக தனது X தளத்தில் அறிவித்துள்ளது. ஏற்கெனவே மேற்கு ஆசிய நாடுகளான ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், தற்போது கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா, ஜப்பான் இடையேயும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.


