News November 19, 2025
பெரம்பலூர்: இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பது குறித்து இலவச பயிற்சி நவ.24 முதல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு நவ.22-ம் தேதி முன்பதிவு செய்து வந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9123548890 என்ற என்னை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
பெரம்பலூர்: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
பெரம்பலூர்: 2021 சட்டமன்ற தேர்தல் ஒரு பார்வை!

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் குன்னம் உள்ளிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ம.பிரபாகரன் 1,21,882 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதேபோல குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சரான சா.சி.சிவசங்கர் 1,03,922 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
News March 8, 2026
பெரம்பலூர்: ஆட்சியர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடத்தப்பட்ட மகளிர் தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி பங்கேற்று கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பெண் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


