News November 19, 2025

இன்றும் என்கவுன்ட்டர்.. 7 மாவோயிஸ்ட்கள் பலி

image

ஆந்திரா – ஒடிசா எல்லை பகுதியில் இன்று மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, ஆந்திரா உளவுத்துறை ADGP மகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்கள் இன்று கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் <<18318822>>மாவோயிஸ்ட்<<>> முக்கிய தளபதி ஹிட்மா உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 22, 2026

Voter ID-யில் எழுத்துப்பிழை இருந்தாலும் வாக்களிக்கலாம்

image

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் எழுத்துப்பிழை (அ) அச்சுப்பிழை இருப்பின், அதை பொருட்படுத்தாது வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என ECI தெரிவித்துள்ளது. அதேபோல், வாக்காளர் அட்டையில் உள்ள வாக்காளர்களின் போட்டோ நிகழ்காலத்தில் பொருந்தாமல் இருப்பின், ECI குறிப்பிட்டுள்ள <<19404034>>12 ஆவணங்களில்<<>> ஒன்றை காண்பித்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். ஷேர் பண்ணுங்க.

News March 22, 2026

திமுகவா, பாஜகவா? அடிமையாக்குவது யார்?

image

கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் சிறிய கட்சிகளை பெரியண்ணன் மனநிலையில் அணுகுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதிமுகவை அடிமையாக்கி டெல்லியிலிருந்து இயக்குவதாக திமுக விமர்சனம் செய்து வருகிறது. விசிக, சிபிஎம், சிபிஐ, தவாகவுக்கு தொகுதிகளை குறைத்து திமுக அதே மனநிலையில் பார்க்கிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். தங்கள் உழைப்பை மதிக்கவில்லை என விசிகவினர் SM-ல் வெளிப்படையாகவே பதிவிட்டு வருகின்றனர்.

News March 22, 2026

BREAKING: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினார்

image

திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறுவதாக வேல்முருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வதாக திமுக கூறியது. ஆனால், கூடுதல் தொகுதி ஒதுக்கீடு, 10 அம்ச கோரிக்கை உள்ளிட்ட நாங்கள் வைத்த எந்த கோரிக்கையும் திமுக பரிசீலிக்கவில்லை என்பதால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!