News April 24, 2024

பெட்டி கடைக்கு தீ வைத்தவர் மீது வழக்கு பதிவு

image

பெருநாழி நாடார் பஜாரைச் சேர்ந்த வேல்முருகன் (37) அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தோப்புராஜன் (30) என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வேல்முருகனின் கடைக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்த டூவீலரை திருடிக்கொண்டு தோப்புராஜன் தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து பெருநாழி போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News January 21, 2026

இராம்நாடு: கண்மாயில் தவறி விழுந்த இளைஞர் பலி

image

தேவகோட்டையை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி பாரதி(28). இவர், நேற்று கட்டடப் பணிக்காக திருவாடானை அருகே கல்வழியேந்தல் கிராமத்திற்கு வந்தார். கட்டடத்ததிற்கு தண்ணீர் எடுக்க அருகேயுள்ள கண்மாயிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது, கண்மாய்க்குள் தவறி விழுந்தவர் மூழ்கி உயிரிழந்தார். திருவாடானை போலீசார் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 21, 2026

ராம்நாடு : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 21, 2026

இராமநாதபுரத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

image

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா ஜன.26 அன்று கொண்டாடபட உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தை தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் வந்து செல்வவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!