News November 19, 2025
புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Similar News
News March 13, 2026
புதுச்சேரி: வீட்டு சிலிண்டர் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு சீல்

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், வீட்டு உபயோக எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர்களை ஹோட்டல்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், இதை கண்காணிக்க காவல்துறையினரும் குடிமைப் பொருள் வழங்கல் துறையினரும் இணைந்து உடனடி சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார்.
News March 13, 2026
புதுச்சேரியில் கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்

லாஸ்பேட்டை போலீசார் ஏர்போர்ட் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வேகமாக வந்த வாலிபரை மடக்கி சோதனையிட்டனர். அதில் அவர் 630 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மேலும் விசாரித்ததில் அவர் பெயர் சந்தோஷ் என்பதும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 630 கிராம் கஞ்சா இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
News March 12, 2026
புதுச்சேரி: பாதுகாப்பு குறைபாடு – நடவடிக்கை எடுக்க பரிந்துரை

புதுச்சேரி ஆளுநர் தற்காலிகமாக தங்கியிருக்கும் மாளிகைக்குள், கடந்த 9ஆம் தேதி நள்ளிரவு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மதுபோதையில் அத்துமீறி நுழைந்துள்ளார். இது சம்பந்தமாக பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த ஆயுதப்படை காவலரை பணிநீக்கம் செய்யவும், அவருடன் பணியில் இருந்த 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யவும் டி.ஜி.பி ஷாலினி சிங்குக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்துள்ளார்.


