News November 19, 2025

திருச்சி: பஸ் ஸ்டாண்டில் லாரி மோதி விபத்து

image

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, மஞ்சள் திடல் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிழற்குடை மீது, துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி நிழற்குடைகுள் புகுந்த போது, அங்கு அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் நிற்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதேநேரம் அஜாக்கிரதையாக செல்போன் பேசியபடி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 12, 2026

திருச்சி: அதிரடி தீர்ப்பு – 20 ஆண்டுகள் கடுங்காவல்

image

திருச்சியை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, குழந்தை திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 12, 2026

திருச்சி: அதிரடி தீர்ப்பு – 20 ஆண்டுகள் கடுங்காவல்

image

திருச்சியை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, குழந்தை திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 12, 2026

திருச்சி: விவசாயி அடித்துக்கொலை?

image

திருச்சி மாவட்டம் ஆலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ்(50). இவர் நேற்றுக் காலை வீட்டுக்கு வராததால், அவரது மனைவி இசபெல்லாராணி, மகன் ஜேசன் ஆகியோர் தங்களது வயலுக்கு சென்று பார்தபோது, அவர் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி யாரேனும் கொலை செய்தனரா என விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!