News November 19, 2025
புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Similar News
News March 12, 2026
புதுவை: ஊரக வளர்ச்சி துறை சார்பில் நலத்திட்ட உதவி

புதுவை கோர்க்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News March 12, 2026
புதுவை: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
புதுச்சேரி: பாஜகவில் இணைந்த 300-க்கும் மேற்பட்டோர்

மண்ணாடிப்பட்டு, பெரியபேட் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் முருகன், குப்பன் மற்றும் சாந்தப்பன் ஆகியோர் தலைமையில், சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழா பாஜக நிர்வாகி ராஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.


