News November 19, 2025

தங்கச்சிமடம் கடலில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி

image

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் வடக்கு கடலில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவு பணிக்காக பாறாங்கற்கள் கொண்டு வந்த டிப்பர் லாரி பாறாங்கற்கள் இறக்கும்போது ஹைட்ராலிக் உடைந்து டிப்பர் லாரி கடலில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். கடலில் கவிழ்ந்த லாரியை கிரேன் உதவியுடன் போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

Similar News

News March 6, 2026

ராம்நாடு: தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டிய மக்கள்

image

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட காரங்காடு கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள மாதா தேவாலய நிலத்தை அளந்து எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இதற்காக வருவாய்த் துறை தேதி அறிவித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தனர்.

News March 6, 2026

பரமக்குடி: முகமூடி கொள்ளையர்கள்; போலீசார் தகவல்

image

பரமக்குடியில் (பிப்.25) அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்த மூவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தது சிசிடிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பெருமாள் கோயில் பின்புறம் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து சில ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்தனர். தேனி, போடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. திருப்புல்லாணியில் திருடப்பட்ட டூவீலர் மீட்கப்பட்ட நிலையில், மர்ம நபர்கள் தப்பினர். போலீசார் தீவிர தேடுதல்.

News March 5, 2026

ராம்நாடு : வீடு, நில பத்திர நகல் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

image

இராமநாதபுரம் மக்களே, இங்கு <>க்ளிக் <<>>செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!