News November 19, 2025

தஞ்சை: பைக் மோதி கூலி தொழிலாளி பலி

image

பேராவூரணி, பொன்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூலித் தொழிலாளி. இவர் நேற்று ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திமணிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் கண்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.

Similar News

News March 14, 2026

தஞ்சாவூர்: விபத்தில் இளைஞர் பரிதாப பலி

image

சேலம் மாவட்டம் நாயக்கம்பட்டியை சேர்ந்தவர் அஜித்குமார்(25). கூகித் தொழிலாளியான இவர், திருவோணத்தை அடுத்துள்ள கலியரான்விடுதியில் தங்கி விவசாயப் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார், ஊரணிபுரத்திற்கு பைக்கில் சென்றபோது, சாலையோர தடுப்பு கம்பில் மோதியுள்ளார். இதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்ப இடத்திலே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News March 14, 2026

தஞ்சாவூர்: அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை

image

தஞ்சாவூர், ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மீனா(50). இவர் வேளாண்மை துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று, அவரது சகோதரி வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 9 கிராம் நகை மற்றும் வைர நகைகள் திருடு போயிருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கள்ள பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News March 14, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!