News November 19, 2025

திருச்சி: பஸ் ஸ்டாண்டில் லாரி மோதி விபத்து

image

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, மஞ்சள் திடல் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிழற்குடை மீது, துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி நிழற்குடைகுள் புகுந்த போது, அங்கு அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் நிற்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதேநேரம் அஜாக்கிரதையாக செல்போன் பேசியபடி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 7, 2026

திருச்சி: நாய்க்குட்டிகளை கொன்ற பெண் கைது

image

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்த மீனாட்சி மிஸ்ரா என்ற பெண், தெரு நாய் குட்டிகளை சுவரில் வீசி எறிந்து கொள்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து பீப்பிள் ஃபார் அனிமல் என்ற அமைப்பின் சார்பில், அந்த பெண்ணை கைது செய்ய கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஜீயபுரம் காவல்துறையினர் மீனாட்சி மிஸ்ராவை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 7, 2026

திருச்சி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

திருச்சி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 7, 2026

திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

image

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தம்பதியினர் முரளி(32), சினேகா(26). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், சினேகா செல்போனில் அதிகம் பயன்படுத்துவதாக கூறி, முரளி கண்டுத்துள்ளா. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த முரளி அரிவாளால் சினேகாவை வெட்டியுள்ளாட். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, முரளியை கைது செய்தனர்.

error: Content is protected !!