News April 24, 2024
அணைக்கட்டு: சந்தையில் ரூ.80 லட்சம் வர்த்தகம்

வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) ஒரே நாளில் ரூ.80 லட்சத்திற்கும் அதிகமாக வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 21, 2025
காட்பாடியில் ரயில் சக்கரம் ஏறியதில் பெண் பலி

வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (36) விடுமுறை முடிந்து பணிக்கு செல்ல, மனைவி சிந்து (32) உடன் காட்பாடி ரயில்வே நிலையம் வந்தார். நேற்று (ஆக.20) காலை சபரி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ரயில் மெதுவாக கிளம்பியபோது, கணவரின் அடையாள அட்டை தன்னிடம் இருப்பதை உணர்ந்த சிந்து, அதை கொடுக்க முயன்றார். அந்த நேரத்தில் தவறி தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
News August 21, 2025
விஐடி பல்கலை.யுடன் இணைந்த முன்னணி நிறுவனம்

வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் முன்னணி கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஐஎம் நியோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (ஆக.20) கையெழுத்தானது. விஐடி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் தலைமை வகித்தார், செயல் இயக்குநர் சந்தியாபென்ட ரெட்டி, துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
News August 21, 2025
வேலூர் பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) கண்காட்சி :

வேலூர் பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான உடல்கூறியல் கல்வி கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சிஎம்சி உடல்கூறியல் துறை சார்பில் அறிவியல் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சி ஆகஸ்ட் 22 வரை நடைபெறும். உதவும் உள்ளங்கள் அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார் .