News April 24, 2024

கூண்டு வைத்து மீன்பிடிக்கும் மீனவர்கள்

image

ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகி படகுகளை இழக்கும் அவல நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் கடலோரப் பகுதிகளில் கூண்டு வலையில் மீன்பிடிக்க மீனவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பாம்பன், குந்துகால், மண்டபம் தோணித்துறை, ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரையில் சில மீனவர்கள் கூண்டு வைத்து மீன்பிடிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.

Similar News

News November 19, 2025

தங்கச்சிமடம் கடலில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி

image

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் வடக்கு கடலில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவு பணிக்காக பாறாங்கற்கள் கொண்டு வந்த டிப்பர் லாரி பாறாங்கற்கள் இறக்கும்போது ஹைட்ராலிக் உடைந்து டிப்பர் லாரி கடலில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். கடலில் கவிழ்ந்த லாரியை கிரேன் உதவியுடன் போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

News November 19, 2025

திரு உத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்

image

இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்திரகோசமங்கையில் அருள்பாளித்து கொண்டு இருக்கும் மங்களநாத சுவாமி ஆலயத்தில் எழுந்தருளிய நடராஜருக்கு ஆருத்ரா தரிசனத்திற்கு முன் ஜனவரி 2ம் தேதி(02.01.2026) கலைக்கப்பட்டு மரகத திருமேனியாக கட்சியலிப்பார். அதன்பின் ஜனவரி 3ஆம் தேதி (03.01.2026)அதிகாலையில் சந்தானம் சாத்தப்பட்டு அன்று முழுவதும் கட்சியலிப்பார். *ஷேர் பண்ணுங்க

News November 19, 2025

இராம்நாடு: 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது போக்சோ

image

இராமநாதபுரம் சமூக நீதி விடுதியில் 7ம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்தும், மாணவரை சாதி பெயர் சொல்லி மிரட்டியதாக பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். 3 மாணவர்கள், விடுதி காப்பாளர் மீது எஸ்.டி,எஸ்.சி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

error: Content is protected !!