News April 24, 2024
புதுவை படகு குழாமில் பனானா ரைடர் வெள்ளோட்டம்

புதுவையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நோணாங்குப்பம் படகு குழாமில் பனானா ரைடர் அறிமுகம் செய்வதற்காக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதுபற்றி சுற்றுலாத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பே பனானா ரைடர் படகு வாங்கப்பட்டு அது இயக்கப்படாமல் இருந்தது. மீண்டும் இயக்க முடிவு செய்து நேற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 8 பேர் வரை பயணிக்கலாம் எனக் கூறினர்.
Similar News
News November 19, 2025
புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News November 19, 2025
புதுச்சேரி: சிறப்பு மருத்துவர்கள் வருகை!

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை, நரம்பியல், இதயவியல் மற்றும் சிறுநீரகவியல் துறைகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் வரும் 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்து, காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை, மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.
News November 19, 2025
புதுவை: இனி சனிக்கிழமைகளிலும் பள்ளி!

புதுவை அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி. கல்வித்திட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 10, 12-ம் வகுப்புகளுக்கு இறுதி தேர்வு நடக்கவுள்ளது. அதனையொட்டி புதுவையில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இனிமேல் சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்தவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அமன் ஷர்மா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


