News April 24, 2024
வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்ய மலை ஏறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிலும் பல்லாயிரக்கணக்கானோர் மலை ஏறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் என்ற இளைஞர் மலை ஏறி விட்டு இறங்கும்போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
Similar News
News September 27, 2025
கோவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (20). இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து துடியலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 26, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (26.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 26, 2025
கோவையில் 2 நாள் சிறப்பு வரி வசூல் முகாம்

2025-2026 முதலாம் அரையாண்டு வரை கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகிய வரியினங்களை பொதுமக்கள் செலுத்த சிறப்பு வரிவசூல் முகாம்கள் கோவையில் அனைத்து மண்டலங்களிலும் வரும் 27,28 ஆகிய 2 நாட்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது.