News April 24, 2024
பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பிரதமர் மோடியின் அவதூறு பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில காங். தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். காங். தேர்தல் அறிக்கையில் கூறாததை மோடி திரித்துக் கூறியிருப்பதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான விஷமத்தனமான கருத்துக்களைப் பேசி வருவதாகவும் சாடினார். மேலும், அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் அவருக்கு மக்கள் உரிய படிப்பினை வழங்குவார்கள் என்றும் கூறினார்.
Similar News
News January 15, 2026
கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?

கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடத்திற்கு பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். கரும்பில் உள்ள கால்சியம் சத்து, எச்சிலுடன் கலந்து வேதிவினை ஆற்றுகிறது. அந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கும்போது, அதிகமான சூட்டை கிளப்பும் எதிர்வினை நடக்கும். இதனால் நாக்கு வெந்து விடும். இதனை தவிர்க்க கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்த வேண்டும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்கள்.
News January 15, 2026
குழந்தை பிறந்த பின் வயிறை பழைய நிலைக்கு மாற்றணுமா?

பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் பலவிதமான உடல் மாற்றங்களை எதிர்கொள்வர். அதில் பொதுவான பிரச்னை தொப்பை தான். உங்கள் வயிறை பழைய நிலைக்கு மாற்ற சில வழிகள் இருக்கிறது. ➤பழங்கள், காய்கறிகள், புரதம் மற்றும் கொழுப்புகள் என சமநிலையான உணவை உட்கொள்வது அவசியம் ➤வயிற்று தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்யலாம் ➤Stress ஆகாமல் பார்த்துக்கொள்வது அவசியம் ➤போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். SHARE.
News January 15, 2026
ஜன நாயகனுக்கு பி.சி.ஸ்ரீராம் ஆதரவு!

’உண்மை எங்கே இருக்கிறது’ என விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு ஆதரவாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் X-ல் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் சென்சார் வழக்கில் சென்னை HC-ன் உத்தரவை எதிர்த்து KVN நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை SC இன்று தள்ளுபடி செய்தது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், பி.சி.ஸ்ரீராமின் ஆதரவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.


