News April 24, 2024
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ஒற்றுமை, மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கு நேர் எதிராக மோடியின் பேச்சு அமைந்துள்ளதாக சாடினார். மேலும், தேர்தல் விதிகளை மீறியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராகவும் அவரது பேச்சு உள்ளதாக திருமா குற்றம் சாட்டினார்.
Similar News
News January 8, 2026
உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலகம், திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவை பார்த்து பயனடையுங்கள். உங்களுக்கு மெனுவில் Jobs பிரிவு வரவில்லை எனில் Way2News App-ஐ அப்டேட் செய்யவும்.
News January 8, 2026
சென்சார் விசயத்தில் விஜய் பில்டப்: அப்பாவு

ஜனநாயகன் கடைசி படம் என்பதால் சென்சார் விசயத்தில் விஜய் பில்டப் செய்வதாக அப்பாவு விமர்சித்துள்ளார். 41 பேர் இறந்தபோது, ‘சென்னையில் தான் இருக்கிறேன், முடிந்தால் கைது செய்யுங்க’ என வீர வசனம் பேசினார், இப்போது அதனை சிபிஐ விசாரிக்கும் நிலையில் பேசுவாரா என கேள்வி எழுப்பினார். இந்த விசயத்தில் பாஜகவுடன் சேர்ந்து விஜய் நாடகமாடுவதாகவும், விரைவில் அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
தவெகவின் தேர்தல் ஆஃபர்: திருமாவளவன்

தேர்தலுக்காக தவெக எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு தருவதாக தவெக ஆஃபர் அளிப்பதாக கூறிய அவர், தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல, தேர்தலுக்கு ஆஃபர் கொடுக்கும் கட்சியாக தவெக உள்ளது என விமர்சித்துள்ளார். தனித்தே ஆட்சியை பிடிக்க முடியும் என நம்பும் அவர், தேர்தலுக்கு ஆஃபர் போட்டு காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


