News November 19, 2025
மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விவரம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் மழை குறைந்த காணப்பட்டது. தொடர்ந்து மாலைக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 40.20 மிமீ, செம்பனார்கோவிலில் 35.20 மிமீ, மயிலாடுதுறையில் 30.10மிமீ சீர்காழியில் 23மிமீ மழை பதிவாகியுள்ளது
Similar News
News December 4, 2025
மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு!

TNUSRB நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தேவையான ஆவணங்களுடன் வேலை வாய்ப்பு மையத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்
News December 4, 2025
மயிலாடுதுறை: போக்குவரத்து நிறுத்தம்

கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இருந்து உச்சிமேடு பாலுரான்படுகை உள்ளிட்ட 10 கிராமங்கள் வழியாக மாதிரிவேளூர் செல்லும் சாலையில் அரசடி என்ற இடத்தில் சாலை சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு கனமழையால் இரண்டாக பிளந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு பிரதான சாலையாக விளங்கும் இந்த சாலை மூடப்பட்டதால் கிராம மக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்
News December 4, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (டிச 5) காலை 10 மணி முதல் 5 மணி வரை நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள் காப்பீட்டு தொகைகள் மற்றும் பங்கு தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாம் அந்தந்த வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டெடுக்க அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றுகளுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்


