News April 24, 2024

கடலூர் அருகே விபத்து; மரணம் 

image

விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர் நேற்று காலை விருதாச்சலத்தில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதே திசையில் பின்னால் வந்த மகேந்திரா டிரக் பைக் மீது மோதியது. அதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 12, 2026

கடலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

கடலூர்: புகையில்லா பொங்கல் ஆட்சியர் வேண்டுகோள்

image

முன்னோர்கள் இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் இருந்துள்ளது. தற்பொழுது போகிப்பண்டிகையில் பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் கொளுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. புகையில்லா பொங்கல் கொண்டாட கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News January 12, 2026

கடலூர்: புகையில்லா பொங்கல் ஆட்சியர் வேண்டுகோள்

image

முன்னோர்கள் இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் இருந்துள்ளது. தற்பொழுது போகிப்பண்டிகையில் பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் கொளுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. புகையில்லா பொங்கல் கொண்டாட கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!