News April 24, 2024

அரக்கோணம் அருகே நிலத்தகராறில் வெட்டு!

image

அரக்கோணம் அடுத்த கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன்(45). ஆட்டோ ஓட்டுநரான இவரது உறவினர்கள் பாஸ்கரன், கவாஸ்கர், ராஜ்குமார். இந்த இரு குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.22) இரவு பரந்தாமனை பாஸ்கரன் தரப்பினர் கத்தியால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த பரந்தாமன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 6, 2025

தண்டவாளத்தை கடக்கும் முயன்றவர் ரயில் மோதி பலி

image

அரக்கோணம் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றவர் ரயில் மோதி இறந்தார். இது குறித்து நவ.5 ம் தேதி அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார் என விசாரித்து வருகிறார்

News November 6, 2025

தீவிர திருத்த கணக்கு சீட்டு வழங்கிய ஆட்சியர் சந்திரகலா

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுருத்தலின்படி, இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சந்திரகலா இன்று (நவ.5) ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு நகராட்சி தனியார் மஹால் தெருவில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதை பார்வையிட்டார்கள். உடன் வட்டாட்சியர் மகாலட்சுமி, ஆணையாளர் சுரேஷ் குமார் இருந்தனர்.

News November 6, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!