News April 24, 2024
போலீசார் எனக்கூறி தங்கச் செயின் பறிப்பு

சிவகங்கை மேலரதவீதியை சேர்ந்த மீனாட்சி(68), நேற்று கோயிலுக்கு சென்றுக்கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் மீனாட்சியிடம் தாங்கள் போலீஸார் என கூறி அவர் அணிந்திருந்த 4 1/2 பவுன் தங்கச் செயினை கழற்றி பையில் வைக்க சொல்லியுள்ளனர். பிறகு அவர் கழற்றி வைக்க முயற்சித்த போது மர்மநபர்கள் செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனனர்.
Similar News
News January 31, 2026
சிவகங்கை: மின் தடை பகுதிகள் அறிவிப்பு

பூசலக்குடி, அமராவதி புதூர் துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தங்குடி, கண்டியூர், சாத்தனகோட்டை, சிறுவாச்சி, ஜமீன்தார் காலனி, நாகவயல் சாலை, காதி நகர், சங்கராபுரம், எஸ்.ஆர். பட்டணம், ஆறாவயல், விசாலயங்கோட்டை, கல்லுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE
News January 31, 2026
சிவகங்கை: மின் தடை பகுதிகள் அறிவிப்பு

பூசலக்குடி, அமராவதி புதூர் துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தங்குடி, கண்டியூர், சாத்தனகோட்டை, சிறுவாச்சி, ஜமீன்தார் காலனி, நாகவயல் சாலை, காதி நகர், சங்கராபுரம், எஸ்.ஆர். பட்டணம், ஆறாவயல், விசாலயங்கோட்டை, கல்லுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE
News January 30, 2026
சிவகங்கை மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டம், வடலூர் இராமலிங்கனார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, வருகின்ற 1.2.2026 அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.


