News April 24, 2024
8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

அருணாச்சலில் கடந்த 19ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலுடன் சட்ட சபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதில், சில இடங்களில் வன்முறை சம்பவங்களும், சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சேதமடைந்தன. இதனால் அங்கு 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து, நாளை (ஏப்.24) அங்கு மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
Similar News
News January 21, 2026
அமமுகவுக்கு 8 தொகுதிகளா? முற்றுப்புள்ளி வைத்த TTV

NDA கூட்டணியில் இணைந்துள்ள அமமுகவுக்கு 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது கூட்டணியில் மட்டுமே இணைந்துள்ளோம்; தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று TTV விளக்கமளித்துள்ளார். தொகுதிப்பங்கீடு தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதுவரை, உண்மைக்கு புறம்பான செய்திகளை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News January 21, 2026
கூட்டணி அமைப்பதில் கோட்டை விடுகிறதா தவெக?

இண்டியா கூட்டணியில் DMK + INC + VCK + LEFT + MDMK + MNM + IUML கட்சிகளும், NDA கூட்டணியில் BJP + AIADMK + PMK + AMMK + TMC+ IJK + TMMK கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அரசியலில் கூட்டணி முக்கியமானவை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியும், இதுவரை தவெகவுடன் யாரும் கூட்டணி அமைக்கவில்லை. தேமுதிக, உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கும் நிலையில், TVK தனித்துவிடப்பட்டுள்ளதா?
News January 21, 2026
நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

தமிழகத்தில் மீண்டும் உறைபனி ஏற்பட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் உறைபனி நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், காலை வேளையில் அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!


