News April 24, 2024

8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

image

அருணாச்சலில் கடந்த 19ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலுடன் சட்ட சபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதில், சில இடங்களில் வன்முறை சம்பவங்களும், சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சேதமடைந்தன. இதனால் அங்கு 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து, நாளை (ஏப்.24) அங்கு மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

Similar News

News January 29, 2026

தேசிய செய்தித்தாள் தினம் இன்று!

image

இன்று தேசிய செய்தித்தாள் தினம். 1780-ம் ஆண்டு இதே நாளில், நாட்டில் முதல்முறையாக ‘ஹிக்கிஸ் பெங்கால் கெசட்’ செய்தித்தாள் அச்சிடப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் செய்தித்தாள்கள் ஆற்றிய பங்கை நினைவு கூறும் விதமாக, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்று செய்தித்தாளாக இருந்தவை இன்று, Short News App-களாக மாறியுள்ளன. காலங்கள் ஓட, வடிவங்கள் மட்டுமே மாறியுள்ளன, வீரியம் எப்போதும் ஒன்றே!

News January 29, 2026

கூட்டணி பற்றி விஜய் மட்டுமே அறிவிப்பார்: CTR

image

தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்.,க்கு மீண்டும் பவர் கிடைக்கும் என விஜய்யின் தந்தை <<18982071>>SAC<<>> கூறியிருந்தார். இதையடுத்து எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை என செல்வப்பெருந்தகை பதிலளித்திருந்தார். இந்நிலையில், SAC-ன் அழைப்பு என்பது மக்களின் பொதுவான கருத்து என CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் விஜய் அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

News January 29, 2026

EPS-க்கு தெரிந்தது காலில் விழுவது மட்டுமே: CM ஸ்டாலின்

image

முஸ்லிம்களுக்கு எதிரான EPS செயல்படுகிறார் என CM ஸ்டாலின் சாடியுள்ளார். அவருக்கு தெரிந்தது காலில் விழுவது, காலை வாரிவிடுவது மட்டும்தான் என்ற அவர், அதிமுக ஆதரவால்தான் 2019-ல் பாஜக அரசு குடியுரிமை சட்ட மசோதாவை ராஜ்ய சபாவில் நிறைவேற்றியது என்றார். மேலும், தற்போது ஒரே மேடையில் நிற்கும் அந்த மக்கள் விரோதக் கூட்டணியை ஒட்டுமொத்தமாக விரட்டும் கடமை அனைவருக்கும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!