News April 24, 2024
தர்பூசணி, இளநீர் விற்பனை, விலை அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் தர்பூசணி, எலுமிச்சை, இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது. அதேசமயம், இவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை, தற்போது 3 மடங்கு அதிகரித்து ₹120க்கு விற்பனையாகிறது. தர்பூசணி கிலோ ₹15-20 வரையும், இளநீர் ₹50-70 வரையும் விற்பனையாவதால் மக்கள் கோடை வெப்பத்தை தணிக்க அதிகம் செலவிட வேண்டியுள்ளது.
Similar News
News January 28, 2026
திமுகவிடம் விசிக வைத்த புது டிமாண்ட்

தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை தீவிரமாய் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் திமுகவிடம், 2 இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்குமாறு விசிக கேட்பதாக பேசப்பட்டது. இதற்கு திமுக தலைமை ஒப்புக்கொள்ளவில்லையாம். எனவே, 2 இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கவில்லை எனில் 1 ராஜ்யசபா சீட் கொடுக்குமாறு புதிய டிமாண்ட் ஒன்றை விசிக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
News January 28, 2026
பிப்.1-ல் டாஸ்மாக் விடுமுறை.. அரசு முக்கிய அறிவிப்பு

வள்ளலார் நினைவு நாளையொட்டி பிப்.1-ம் தேதி (வரும் ஞாயிறு) மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளனர். அதில், அரசின் உத்தரவை மீறி யாரேனும் கடையை திறந்தாலும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News January 28, 2026
வறுமையில் வாடும் பத்மஸ்ரீ வென்றவரின் குடும்பம்

சமீபத்தில் மறைந்த ஓவியர் கிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணனின் குடும்பத்தினர், வாழ்வாதாரம் இன்றி குடிசையில் வசித்து வருகின்றனர். கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை கவனிக்கும் மனைவி சுசீலா, தனது 4 பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்படுகிறார். எனவே, கிருஷ்ணனின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.


