News April 24, 2024

விழுப்புரம்: 91 லட்சம் ரூபாய்க்கு விற்பனை

image

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் மணிலா, எள், நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனைக்காக நேற்று (ஏப்ரல் 22) கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 91 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விலைபோனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 10, 2026

விழுப்புரத்தில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதியின் வேளாண்மைப் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். SHARE!

News February 10, 2026

இலவச தையல் இயந்திரம் வழங்கிய ஆட்சியர்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (பிப்.10) தையல் இயந்திரங்களை வழங்கினார். உடன் மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் உட்பட பலர் உள்ளனர்.

News February 10, 2026

விழுப்புரத்தில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!