News April 24, 2024

தமிழகத்தில் இதுவரை ₹1,308 கோடி பறிமுதல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 20ஆம் தேதி காலை வரை பறக்கும் படைகள் மூலம் ₹1,308 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை மூலம் மட்டும் ₹84.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், மொத்தமாக ₹179.84 கோடி ரொக்கப்பணம், ₹1,083 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Similar News

News January 18, 2026

மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

image

₹2,000 உரிமைத் தொகை, ஆண்களுக்கும் இலவச பஸ் என அதிமுக அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது. இந்நிலையில், NDA மட்டுமல்லாது, தவெகவுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் கவர்ச்சியான வாக்குறுதிகளை வழங்க திமுக தயாராகி வருகிறதாம். இதன் ஒரு பகுதியாக மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தவும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விரைவில் இதுதொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 18, 2026

SIR-ல் கேரளா தலைமை தேர்தல் அதிகாரி பெயரே மிஸ்ஸிங்!

image

SIR வரைவு வாக்காளர் பட்டியலில் கேரளா தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் விடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டில் அவர் பெங்களூருவில் இருந்ததால் அவர் பெயர் தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்து வாக்காளர் சேர்ப்பு முகாமில் தனக்கும், தனது மனைவி & மகனுக்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவர் விண்ணப்பித்துள்ளார்.

News January 18, 2026

திமுக – காங்., ஒருவரை ஒருவர் முடித்துக்கொள்வர்: தமிழிசை

image

திமுக- காங்., இடையே நம்பிக்கையில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அவர்களிடையே கூட்டணி தொடருமா என்பதை சொல்ல முடியவில்லை என்ற அவர், 1967-ல் காங்கிரஸை திமுக முடித்தது; இப்போது ஒருவரை ஒருவர் முடித்துக் கொள்வார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அநீதியும் முடிந்துபோகும், மிகவும் மோசமான ஆட்சியும் முடிந்துபோகும். 2026 NDA கூட்டணிக்கானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

error: Content is protected !!