News April 24, 2024
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தங்கக் குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பக்தர்களின் கோவிந்தா!, கோவிந்தா! முழக்கங்களுக்கு இடையே ஆற்றில் எழுந்தருளி அருள் பாலித்தார். பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளியதால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அதிகளவில் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
Similar News
News January 15, 2026
520 பெண்களுடன் கணவர்.. மனைவியின் விநோத செயல்!

ஜப்பான் பெண்ணுக்கு, அரிய வகை நோயுடன் மகன் பிறக்க, கணவன் துணையுடன் அதை வெல்ல நினைக்கிறார். அப்போது தான், கணவர் 520 பெண்களுடன் முறை தவறி பழகி வருவது தெரியவருகிறது. முதலில் பழிவாங்க எண்ணினாலும், மகனின் நிலை கண்டு நூதன முடிவை எடுத்தார். கணவனை பிரிந்து, அவரின் முறையற்ற உறவுகளை Comics புக்காக வெளியிட்டுள்ளார். இதன்மூலம் கோபத்தை தணித்து கொண்டது மட்டுமின்றி, மகன் சிகிச்சைக்கும் பணம் சேர்த்துள்ளார்.
News January 15, 2026
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: CM-ன் சிறப்பு பரிசு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி ஆட்டத்தை மாற்றிய வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவருக்கு CM ஸ்டாலின் சார்பில் ₹8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி (17 காளைகள்) 2-ம் இடத்தை பிடித்தார். சிறந்த காளையான மந்தை முத்துக்கருப்பனின் உரிமையாளர் விருமாண்டி பிரதர்ஸ்-க்கு DCM சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
News January 15, 2026
Grok AI-க்கு கடிவாளம் போட்ட எலான் மஸ்க்!

எலான் மஸ்க்கின் ‘X’ தளம், அதன் Grok AI மூலம் <<18745124>>ஆபாசமாக<<>> சித்தரிக்கும் படங்களை உருவாக்குவதை தடுக்க புதிய தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெண்கள், குழந்தைகளின் புகைப்படங்களை Grok AI மூலம் ஆபாசமாக மாற்றப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, X நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த கட்டுப்பாடு சாதாரண பயனர்களுக்கு மட்டுமல்லாமல், பணம் செலுத்தி சந்தா வாங்கியுள்ள பயனர்களுக்கும் பொருந்தும்.


