News April 24, 2024
எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதி திட்டம்

ஒபெக் கூட்டமைப்பு, வரும் ஜூலை முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் படிப்படியாக அதிகரிக்க இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிலையில், 2025க்குள் 10 மில்லியன் பேரல்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், அடுத்தாண்டு சவுதியின் பொருளாதார வளர்ச்சி 5.5% முதல் 6% ஆக இருக்குமென ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.
Similar News
News January 3, 2026
தவெக பொங்கல் பரிசில் குக்கர்

தவெக சார்பில் குக்கர், கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த், 500 பெண்களுக்கு இத்தொகுப்பை வழங்கியுள்ளார். முன்னதாக, கரூர் மக்களுக்கு தீபாவளி பரிசாக செந்தில்பாலாஜி சில்வர் அண்டா கொடுத்திருந்தார். இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் குக்கரை தவெக இணைத்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
News January 3, 2026
FLASH: அரசு ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்!

<<18749969>>TAPS பென்ஷன்<<>> திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அத்துடன் ஜாக்டோ-ஜியோ அமைப்பு வரும் 6-ம் தேதி முதல் நடத்த இருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும், தங்களது இதர கோரிக்கைகளையும் CM நிறைவேற்றுவார் என நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர்கள், CM ஸ்டாலினுக்கு இனிப்பு ஊட்டி இந்த அறிவிப்பை கொண்டாடுகின்றனர்.
News January 3, 2026
KKR அணியில் இருந்து வங்கதேச வீரரை நீக்க BCCI ஆணை

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு KKR அணிக்கு அறிவுறுத்தி உள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்டதை அடுத்து, IPL ஏலத்தில் முஸ்தபிசுரை ₹9.20 கோடிக்கு வாங்கியதற்காக அந்த அணியின் உரிமையாளரும், <<18746993>>நடிகருமான ஷாருக் கானுக்கு<<>> நாடு முழுவதும் பாஜக, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பிசிசிஐ இன்று உத்தரவிட்டுள்ளது.


