News April 24, 2024
பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று (ஏப்ரல் 22) குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கிட அதே கோம் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி (ம) ரேவதி முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குழந்தை திருமணம், நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Similar News
News January 14, 2026
விழுப்புரத்தில் வடமாநிலத்தவர் அதிரடி கைது!

விழுப்புரம் புறவழிச்சாலை சந்திப்பு அருகே, காவல் ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார், நேற்று சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ஹலீம் உல்லா என்பவர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், 60 கிராம் கஞ்சா மற்றும் 1152 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
News January 14, 2026
விழுப்புரம்: மருமகன் கண்முன்னே மாமனார் பலி!

விழுப்புரம்: முட்ராம்பட்டைச் சேர்ந்தவர் விவசாயி ராஜாராம். இவரது மருமகன் குணசேகரனுடன் நேற்று புதுச்சேரிக்கு பைக்கில் சென்றார். பின்னர் மீண்டும் விழுப்புரத்தை நோக்கி திரும்பியபோது, கெங்கராம்பாளையம் அருகே கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜாராம் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், குணசேகரன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 14, 2026
விழுப்புரத்தில் தீக்குளித்த பெண் உயிரிழப்பு!

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் பாலாமணி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 22ம் தேதி மகேஸ்வரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


