News April 24, 2024

முத்தாரம்மன் கோயில் வருஷாபிஷேகம்

image

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதனை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முதலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனித நீரால் கோபுர கலசங்களுக்கு அபிஷேகமும் , சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News January 12, 2026

தூத்துக்குடி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

தூத்துக்குடி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in <<>>என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News January 12, 2026

திருச்செந்தூரில் லாரி மோதி தலை நசுங்கி உயிரிழப்பு

image

திருச்செந்தூர் மெயின் சாலையில் அம்பேத்கர் சிலை அருகே லாரி ஒன்று பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பூ ஏற்றி சென்ற ஏரல் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி பிரேம்குமாரின் தலை, லாரி சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 12, 2026

துத்துக்குடி: கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற

1.கூட்டு பட்டா

2.விற்பனை சான்றிதழ்

3.நில வரைபடம்

4.சொத்து வரி ரசீது

5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்

இந்த ஆவணங்களுடன்<> இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

error: Content is protected !!