News April 24, 2024

ஈரோடு: மாயமான எழுத்துக்கள்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தீரன் சின்ன மலை என்று எழுத்துகளால் பொறிக்கப்பட்டு பெருத்துறை சாலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் என்ற வரிகளில் உள்ள எழுத்துகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.  சரியான எழுத்துகளை அமர்த்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News January 14, 2026

அந்தியூரில் சேவல் சூதாட்டம்: 4 பேர் கைது

image

அந்தியூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான காவல்துறையினர் பெருமாபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விமல், இளவரசன், கணேசன், கதிரேசன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News January 14, 2026

நஞ்சை ஊத்துக்குளி: மயங்கி விழுந்தவர் பலி

image

கொடுமுடியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (65). இவர் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் ஆலையில் விறகு லோடு இறக்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 14, 2026

சென்னிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!

image

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஜனவரி 15 (தைப்பொங்கல்) மற்றும் ஜனவரி 18 (தை அமாவாசை) ஆகிய தினங்களில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால், மலைப்பாதையில் தனியார் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ​இருப்பினும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கோயில் பேருந்துகள் மூலம் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!