News April 24, 2024

தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

image

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிவந்த முருகன், 4ஆம், 5ஆம் வகுப்பைச் சேர்ந்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

Similar News

News January 12, 2026

விஜய்யிடம் விசாரணை நிறைவு

image

டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் நடத்தப்பட்ட முதல் நாள் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. 4 அதிகாரிகள் விஜய்யிடம் தனித்தனியாக சுமார் 4.15 நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கரூரில் மக்கள் மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் நீங்கள் பரப்புரையை நிறுத்தவில்லை, கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஏன் என்பன உள்பட பல்வேறு கேள்விகளுக்கு விஜய் விளக்கமளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 12, 2026

தங்கம் விலை மொத்தம் ₹4,160 உயர்ந்தது

image

சர்வதேச சந்தை எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் ஜன.3-ம் தேதி சவரனுக்கு ₹1,00,800-ஆக இருந்த தங்கம் விலை இன்று ₹1,04,960-ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9 நாளில் மட்டும் சுமார் ₹4,160 அதிகரித்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை சுமார் ₹30,000 உயர்ந்துள்ளது.

News January 12, 2026

மனித கறி கேட்டு ஓட்டலை சூறையாடிய மதுபிரியர்கள்!

image

ஓட்டலில் ஒட்டக கறி கேட்டு பார்த்திருப்போம். ஆனால் மனித கறி கேட்டு இளைஞர்கள் ஓட்டலையே சூறையாடிய சம்பவம் பலரையும் பதற வைத்துள்ளது. கடலூரின் பெண்ணாடம் அருகே உள்ள ஓட்டலுக்கு 7 இளைஞர்கள் மதுபோதையில் சென்றுள்ளனர். அவர்கள் சாப்பிட மனித கறி வேண்டும் என கேட்டதும், ஷாக் ஆன மாஸ்டர் ’அதெல்லாம் இல்லை’ என கூற, ஆத்திரமான 7 பேரும் அவரை தாக்கி ஓட்டலையும் சூறையாடினர். இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைதாகியுள்ளனர்.

error: Content is protected !!