News April 24, 2024
தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிவந்த முருகன், 4ஆம், 5ஆம் வகுப்பைச் சேர்ந்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.
Similar News
News January 12, 2026
BREAKING: டெல்லியில் CBI வலை.. விஜய் அதிர்ச்சி

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் 2 மணிநேரத்திற்கும் மேலாக CBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேர் கொண்ட குழுவினர் 56 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அளித்திருந்த பதில்களுடன் விஜய் அளிக்கும் பதிலில் ஏதேனும் முரண்பாடாக இருந்தால் அது, விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
News January 12, 2026
திமுக – காங்., கூட்டணியில் மீண்டும் சண்டை வெடித்தது

TN-ல் கூட்டணி ஆட்சி இருக்காது, அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் எண்ணம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை என அமைச்சர் <<18826821>>ஐ.பெரியசாமி <<>>கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள செல்வப்பெருந்தகை, ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது, ஐ.பெரியசாமி கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என பேசியுள்ளார். மேலும், இதுகுறித்து ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தான் பேசி முடிவு செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
உங்கள் சகோதரனாக நான் இருக்கிறேன்: CM ஸ்டாலின்

கடலும் நாடுகளும் நம்மை பிரித்தாலும் மொழியும் இனமும் நம்மை இணைக்கின்றன என அயலக தமிழர்கள் தின விழாவில் CM ஸ்டாலின் பேசியுள்ளார். கீழடி, சிவகளை உள்ளிட்ட அகழாய்வுகள் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகமே அறிந்துள்ளதாக கூறிய அவர், திமுக அரசு இந்த வரலாற்று கடமையை செய்துகாட்டி இருப்பதாக கூறினார். மேலும், உங்களுக்காக (அயலக தமிழர்களுக்காக) தமிழகத்தில் இந்த சகோதரன் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.


