News November 19, 2025
ஆற்காட்டில் எஸ்ஐஆர் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா நேற்று ( நவ.18) ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்ஐஆர் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் கரிக்கந்தாங்கல் ஊராட்சி,குக்குண்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னகுக்குண்டி பகுதிகள், ஆற்காடு நகராட்சி ஆகிய பகுதிகளில் பூர்த்தி செய்த படிவங்கள் பதிவேற்றம் செய்வதை ஆட்சியர் பார்வையிட்டார்.
Similar News
News November 19, 2025
அரக்கோணத்தில் இருந்து கேரளா விரைந்த வீரர்கள்!

கேரள மாநிலம் சபரிமலை மண்டல மற்றும் மகர பூஜை பாதுகாப்பு பணிக்காக அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் இன்று (நவ.19) தேதி விரைந்தனர். இவர்கள் பம்பை நதி மற்றும் சன்னிதானம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வீரர்கள் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரப்பர் படகுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் சென்றனர். ஆய்வாளர் பிரதோஷ் தலைமையில் வீரர்கள் சென்றனர்.
News November 19, 2025
ராணிப்பேட்டை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

ராணிப்பேட்டை மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய<
News November 19, 2025
மாவட்ட ஆட்சியர் படிவங்களை பெற்றுக் கொண்டார்

ஆர்க்காடு நகராட்சி கங்கையம்மன் கோயில் தெருவில் வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுத்த படிவங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று (நவ.18) தேதி பெற்றுக்கொண்டார். வாக்காளர்களுக்கு தீவிர சிறப்பு சுருக்க திருத்த படிவங்கள் வழங்கப்பட்டு அதை திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரே என்று வாக்காளரிடமிருந்து படிவங்கள் பெற்றுக் கொண்டார்.


