News April 24, 2024
மோடிக்கு ஓய்வு கொடுக்க மக்கள் தயாராகி விட்டார்கள்

மோடிக்கு மக்கள் ஓய்வு கொடுக்க தயாராகிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் ஆர்எஸ்எஸ் சிந்தாந்தப் பேச்சுக்களை மக்களிடம் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார். வெறுப்பை விதைக்கும் அவரின் பேச்சுக்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மக்களை போல் ஜூன் 4க்கு பிறகு, இந்திய மக்கள் அவருக்கு நிச்சயம் ஒய்வு கொடுப்பார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 4, 2026
T20I WC போட்டிகள்: இந்தியாவில் இருந்து மாத்துங்க..

வங்கதேசத்தில் இந்து ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, IPL தொடரிலிருந்து வங்கதேச வீரர் <<18757649>>முஸ்தபிசுர் ரஹ்மான்<<>> நீக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த நிலையில், கொல்கத்தா, மும்பையில் நடைபெறும் தங்களது மேட்ச்களை இலங்கைக்கு மாற்ற வங்கதேச அணி, ICC-யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களது வீரர்களின் பாதுகாப்பை கருதி இந்த முடிவு எனவும் கூறப்படுகிறது.
News January 4, 2026
சற்றுமுன்: அதிமுகவில் அடுத்த பதவி பறிப்பு

அதிமுக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ்.பாபு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணமோசடி, அடிதடி என இவர்மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்ததன் காரணமாக மா.செ., பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் திருமங்கலம் மோகனை மாவட்ட செயலாளராக நியமனம் செய்ததோடு, வி.எஸ்.பாபுவை அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக மாற்றி EPS உத்தரவிட்டுள்ளார்.
News January 4, 2026
இன்றே கடைசி.. SIR லிஸ்ட்டில் பெயர் இல்லையா

SIR லிஸ்ட்டில் பெயர் விடுபட்டு போனவர்கள், தங்களது பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஆன்லைனில் அல்லது BLO-வை நேரில் சந்தித்து உங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். <<18628448>>ஆன்லைனில் <<>>விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். தமிழ்நாட்டில் மொத்தம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றே கடைசி நாள் என்பதால், நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


