News November 18, 2025

புதுவை: கோவை விழாவுக்கு முதல்வருக்கு அழைப்பு

image

பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் 10 வது முறையாக நாளை மறுநாள் வியாழக்கிழமை பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவிற்கும் கோவையில் நாளை இயற்கை விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த விழாவிலும் பங்கேற்க முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

புதுவை: மலர்க்கண்காட்சி குறித்து ஆலோசனை கூட்டம்

image

புதுச்சேரி அரசு வேளாண்துறை சார்பில், புதுச்சேரியில் வரும் 2026 ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் 36வது காய்கறி, கனி மற்றும் மலர்க்கண்காட்சி நடத்துவது சம்பந்தமாக வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை செயலர், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 18, 2025

புதுவை காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி பயணம்

image

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஆய்வு கூட்டம், இன்று புதுடில்லி இந்திரா பவனில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டசபை தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் டில்லி சென்றுள்ளனர்.

News November 18, 2025

காரைக்கால்: இரங்கலை தெரிவித்த எம்எல்ஏ!

image

நெடுங்காடு எம்எல்ஏ சந்திர பிரியங்கா, காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் தாயார் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காரைக்கால் ஆட்சியர் ரவி பிரகாஷ் தாயார் விஜயவாடாவில் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும் வருத்தமும் அடைந்தேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பணிவுடன் பிரார்த்திக்கிறேன். அவருக்கும், அவருடைய குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

error: Content is protected !!