News April 24, 2024
கடலூரில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை போலியான தகவலைப் பரப்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை. *கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம். *துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. *நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும். *சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான் ஆண்டவன் சோதிக்கிறான்.
News January 12, 2026
நாடு முழுவதும் ஒரு லட்சம் மாநாடுகளை நடத்தும் RSS!

RSS நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக, வரும் 15-ம் தேதி முதல் இந்து சம்மேளனங்களை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாதி, வர்க்க வேறுபாடுகளை களைந்து இந்துக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு லட்சம் மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. ஆன்மிகவாதிகள், முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்று, சமபந்தி உணவுடன் முடியும்.
News January 12, 2026
விஜய்க்கு பல கதைகள் சொன்ன ‘பகவந்த் கேசரி’ இயக்குநர்!

விஜய்யின் கடைசி படத்தை இயக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். ஆனால், ரீமேக் வேண்டாம், நேரடி தமிழ் படம் இயக்குகிறேன் என பல கதைகளை கூறியதாகவும், ஆனால் ‘பகவந்த் கேசரி’ விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், விஜயின் கடைசி படம் எப்போதும் ரிலீஸானாலும் சாதனை படைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


