News November 18, 2025
21,000 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லை

இந்தியாவில் இன்றும் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லாத ஏராளமான கிராமங்கள் உள்ளன. சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம் லடாக்கில் உள்ள மான் & மெராக் என்னும் 2 தொலைதூர கிராமங்களில் தனது சேவையைத் தொடங்கியது. செப்டம்பர் 2024 நிலவரப்படி, நாட்டில் சுமார் 21,000 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் சேவை இல்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதிகபட்சமாக ஒடிசாவில் 6,000 கிராமங்களில் நெட்வொர்க் சேவை இல்லாமல் உள்ளன.
Similar News
News November 19, 2025
கண்மூடித்தனமாக AI-ஐ நம்பவேண்டாம்: சுந்தர் பிச்சை

AI-ல் தவறான தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். AI-ஐ கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என தெரிவித்த அவர், தகவலை வேறு தளத்தில் சரிபார்ப்பதே சிறந்தது எனவும் கூறியுள்ளார். அதேபோல் AI முதலீடு என்பது bubble வெடிப்பது போல பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிபிசி பேட்டியில் கேட்டுக்கொண்டார்.
News November 19, 2025
அதிகம் விற்பனையான டாப் 10 புத்தகங்கள்

சில புத்தகங்கள் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு விற்பனை ஆகியுள்ளது. அவை விற்பனையையும் கடந்து உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன. அவை எந்தெந்த புத்தகங்கள், எவ்வளவு விற்பனையாகி உள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 19, 2025
Sports Roundup: SA அணியில் லுங்கி இங்கிடி சேர்ப்பு

*இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடி சேர்ப்பு. *முத்தரப்பு டி20 தொடரில், ஜிம்பாப்வேவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. *வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு. *100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையை முஷ்பிகுர் ரஹீம் பெறவுள்ளார்.


