News April 24, 2024
விராட் கோலிக்கு அபராதம்

KKR அணிக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் கோபத்தை வெளிப்படுத்திய விராட் கோலிக்குப் போட்டித் தொகையில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தனது இடுப்புக்கு மேலே வந்த பந்தை அடித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்கு நடுவர் அவுட் கொடுக்கவே, நோ பால் கேட்டு முறையிட்டார். ஆனால், கோலி கிரீசுக்கு வெளியே நின்றதால் நடுவர் நோ பால் கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர் கோபத்துடன் வெளியேறினார்.
Similar News
News January 19, 2026
BREAKING: விஜய் அடுத்த அதிரடி

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அவகாசத்தை மேலும் 20 நாள்கள் நீட்டிக்கக்கோரி, விஜய் உத்தரவின்பேரில் தவெக தரப்பில் SC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.18-ம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், வரும் 30-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்தது. இந்நிலையில், பொங்கல் விடுமுறையை சுட்டிக்காட்டி, அவகாசத்தை நீட்டிக்க தவெக வலியுறுத்தியுள்ளது.
News January 19, 2026
வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது தெரியுமா?

விண்வெளி கருப்பாக இருக்கும்போது வானம் மட்டும் எப்படி நீல நிறத்தில் உள்ளது என என்றாவது யோசிச்சிருக்கீங்களா? உண்மையில், சூரிய ஒளி வளிமண்டலத்திற்குள் நுழையும்போது பல நிறங்களை வெளியிடுகிறது. ஆனால், பிற நிறங்களை விட நீலம் & ஊதா போன்ற நிறக்கீற்றுகள் குறுகிய அலையை கொண்டுள்ளதால், அது அதிகமாக சிதறி வானம் முழுவதும் படருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதனால்தான் வானம் நீல நிறத்தில் தெரிகிறது. SHARE.
News January 19, 2026
₹6,000 அல்ல, இனி ₹8,000! வெளியான புது அப்டேட்

சிறு, குறு விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹6,000-ஐ மத்திய அரசு வழங்கி வருகிறது. 4 மாதங்களுக்கு தலா ₹2,000 என 3 தவணைகளில் இத்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், இத்தொகையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று வரும் பிப்.1-ல் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், இத்தொகையை ஆண்டுக்கு ₹8,000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


