News April 24, 2024

நாமக்கல்: எஸ்பி அலுவலகத்தில் தர்ணா

image

பரமத்தி வேலூர் வக்கீல் ராஜகோபால் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் வக்கீல்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடைபெற்று வந்தது. எஸ்பி ராஜேஷ் கண்ணன் வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ..இந்நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணை மேற்கொள்ளும் இன்ஸ்பெக்டர் ,எஸ்ஐ ஆகியோர் வரவேண்டும் என்றனர்.

Similar News

News October 27, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (27.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட அதிகாரியை அல்லது 100-ஐ டயல் செய்து அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

விவாகரத்து: நீதிமன்றத்தை கண்டித்து தர்ணா!

image

திருச்செங்கோடு வட்டம் சங்ககிரி ரோட்டில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் முன்பு, எலச்சிபாளையம் சின்ன மணலியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், திருச்செங்கோடு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு அளித்தும், இதுவரை விவாகரத்து தராததாக கூறி, நீதிமன்றத்தை கண்டித்து இன்று அக்டோபர் 27 காலை 10:40 மணிக்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

News October 27, 2025

நாமக்கல் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, வருகின்ற நவம்பர் 1 அன்று காலை 11.30 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி பயனடையலாம், மேலும் வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!