News November 18, 2025

தேனி: 3 கிலோ கஞ்சா கடத்திய சிறுவன்

image

ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.17) ஆண்டிபட்டி செக் போஸ்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த முத்துமணி (27), வீரமணி (21), ராஜேஷ் (34), ஹரிஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Similar News

News November 18, 2025

தேனி: கிணற்றில் இறந்த நிலையில் ஒருவர் மீட்பு

image

போடியை சேர்ந்தவர் வீரணன் (56). இவர் கடந்த சில மாதங்களாக குடிக்கு அடிமையாகி சுற்றி திரிந்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் போடி பகுதியில் சுற்றி திரிந்தவர் நேற்று (நவ. 17) போடி பொட்டல்களம் பகுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கிடப்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 18, 2025

தேனி: கிணற்றில் இறந்த நிலையில் ஒருவர் மீட்பு

image

போடியை சேர்ந்தவர் வீரணன் (56). இவர் கடந்த சில மாதங்களாக குடிக்கு அடிமையாகி சுற்றி திரிந்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் போடி பகுதியில் சுற்றி திரிந்தவர் நேற்று (நவ. 17) போடி பொட்டல்களம் பகுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கிடப்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 18, 2025

தேனி மாவட்டத்திற்கு மிக கனமழை!

image

தேனி மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!