News November 18, 2025
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விண்ணப்பம் வரவேற்ப்பு!

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை வலைதளத்தில் (www.dipr.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு 28.11-2025 க்குள் அனுப்பவும்.
Similar News
News November 18, 2025
75 ஆண்டுகளுக்கு பின்.. சென்னையில் கம்பேக்!

சென்னையில் கைவிடப்பட்ட டிராம் சேவை மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தகவல்களின்படி, தி. நகர், நுங்கம்பாக்கம், நந்தனம், மற்றும் கலங்கரை விளக்கம் வரையிலான 15.4 கிலோமீட்டர் தூரத்திற்கு நவீன டிராம் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 2 டிராம் பணிமனைகள் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்த பிறகு அவற்றின் சரியான இடங்கள் உறுதி செய்யப்படும்.
News November 18, 2025
75 ஆண்டுகளுக்கு பின்.. சென்னையில் கம்பேக்!

சென்னையில் கைவிடப்பட்ட டிராம் சேவை மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்ட தகவல்களின்படி, தி. நகர், நுங்கம்பாக்கம், நந்தனம், மற்றும் கலங்கரை விளக்கம் வரையிலான 15.4 கிலோமீட்டர் தூரத்திற்கு நவீன டிராம் பாதை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 2 டிராம் பணிமனைகள் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்த பிறகு அவற்றின் சரியான இடங்கள் உறுதி செய்யப்படும்.
News November 18, 2025
ஊழியர்கள் வேலை நிறுத்தம்; அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில்(SIR) அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பணிச்சுமை அதிகரித்துள்ளதால், இன்று (நவ.18) SIR பணிகளில் ஈடுபடாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ, வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், SIR பணிகளை புறக்கணித்து விடுமுறை எடுத்தால், ஊதியம் கிடையாது என தலைமை செயலர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.


