News November 18, 2025
ஒட்டன்சத்திரத்தில் வெடிகுண்டு வைத்த இருவர்!

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாட்டு வெடிகுண்டுகளை வைத்து இரண்டு காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் பிடித்தனர்: பிடிபட்ட முத்து விஜயன் (வீரலப்பட்டி), செல்வராஜ் (அம்பிளிக்கை) இருவரிடமும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
திண்டுக்கல் கலெக்டர் பேரில் போலி வாட்ஸ்அப் கணக்கு!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பெயரிலும், புகைப்படத்திலும் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியானது என ஆட்சியர் அலுவலகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறு செய்திகள் வந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 18, 2025
திண்டுக்கல் கலெக்டர் பேரில் போலி வாட்ஸ்அப் கணக்கு!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பெயரிலும், புகைப்படத்திலும் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியானது என ஆட்சியர் அலுவலகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறு செய்திகள் வந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 18, 2025
பழனி: முன் விரோதம் காரணமாக வாலிபர் படுகொலை

பழனி அடுத்த கோதைமங்கலம் மதுபானக்கூடம் அருகே சின்னதம்பி (எ) தோமையார் என்பவர் முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். தகவல் அறிந்த பழனி டிஎஸ்பி தனஞ்செயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை தொடங்கினர். மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


