News November 18, 2025
நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் தற்போது நடந்து வரும் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளை இன்று முதல் புறக்கணிக்க போவதாக வருவாய் துறை கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். அவசரக் கதியில் நிர்பந்தம் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர் . உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். நிலை அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
நெல்லை மாநகராட்சி அதிரடி – ரூ.2 ஆயிரம் அபராதம்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகர நல அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநகரம் முழுவதும் ஆய்வு செய்து மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளனர்.
News November 18, 2025
நெல்லை மாநகராட்சி அதிரடி – ரூ.2 ஆயிரம் அபராதம்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகர நல அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநகரம் முழுவதும் ஆய்வு செய்து மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளனர்.
News November 18, 2025
நெல்லை: மண் அள்ளியதால் தகராறு; 6 பேருக்கு வெட்டு

விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவன் வீட்டின் அருகில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ரோடு போடுவதற்காக மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணை பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வின் அள்ளிச்சென்றார். இதனை மாரிமுத்துவின் மாமியார் ஆவுளம்மாள் கண்டித்தார். இதனால் நேற்று ஏற்பட்ட தகராறில் செல்வின் மண்வெட்டியால் 6 பேரை வெட்டினார். விகேபுரம் போலீசார் விசாரணை.


