News April 24, 2024
அமலாக்கத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன் விசாரணையில், தேர்தலின்போது பணம் பறிமுதல் செய்தது பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வராது என அமலாக்கத்துறை கூறியது. இதையடுத்து, ஏப்.24க்குள் அமலாக்கத்துறை உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News January 11, 2026
பெரியார் பொன்மொழிகள்

*முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். *ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். *ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள். *துறவிகள் மோட்சத்திற்கு போக வேண்டும் என்று பாடுபடுகின்றார்களே தவிர, சமூகத்தில் மனித மேம்பாட்டுக்காக பாடுபடுவதில்லை.
News January 11, 2026
சீனா, வங்கதேசத்திற்கு செக் வைக்க புதிய கடற்படை தளம்!

மே.வங்கத்தின் ஹால்டியா துறைமுகத்தில் புதிய கடற்படை தளத்தை இந்திய கடற்படை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு சிறிய அளவிலான தாக்குதல் கப்பல்கள், டிரோன்களுடன் 100 வீரர்கள் நிலைநிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ஆதிக்கத்திற்கு செக் வைக்கும் வகையிலும், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவலை தடுக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
News January 11, 2026
‘ஜனநாயகன்’ to ‘டாக்ஸிக்’ வரை.. யார் இந்த KVN?

‘ஜனநாயகன்’, ‘டாக்ஸிக்’, மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படம் என பல முக்கிய பிரமாண்ட படங்களை KVN நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் நிறுவனர் பெங்களூருவை சேர்ந்த வெங்கட் கே.நாராயணன், பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். ஆரம்பத்தில் கர்நாடகாவில் திரைப்பட விநியோகஸ்தராக தொடங்கிய இவரது பயணம் பிரமாண்ட படங்களை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.


